Friday, August 26, 2011

4. ஆத்ம பிரார்த்தனை பாடல்


4.  ஆத்ம பிரார்த்தனை பாடல்

     இந்த எளிய முறை ஆத்ம பிரார்த்தனையைத் தினமும் காலையில், மாலையில் 6.30-6.51 செய்தல் வேண்டும். உங்கள் உடலையும், மனத்தையும் தளர்வாக வைத்துக் கொண்டு,     முதுகுத் தண்டு நேராக இருக்குமாறு அமரவும்; ஆழ்ந்த மூச்சினை மெதுவாக விடவும்
.
      ஆத்ம பிரார்த்தனை அன்பின் பிரார்த்தனை! அன்பின் பிரார்த்தனை!!  அன்பின் பிரார்த்தனை
!!!
       ஆத்ம பிரார்த்தனை அமைதிப் பிரார்த்தனை! அமைதிப் பிரார்த்தனை!! அமைதிப் பிரார்த்தனை!!!
       ஆத்ம பிரார்த்தனை பண்பின் பிரார்த்தனை! பண்பின் பிரார்த்தனை! பண்பின் பிரார்த்தனை!!!

முதல் நிலை

     கைகளைத் தலைக்கு மேலே கொண்டு சென்று, ஒன்றாகச் சேர்த்தபின் கைகளைப் பிருதிவி முத்திரையில் வைக்கவும்.
தத் எனும் சொல்லின் வடிவான இறைவா
அணுவிலும் அணுவான அருளே எம் இறைவா
தத் எனும் இறைவா
ஐம்பூத வடிவாக உறைகின்ற இறைவா
ஆற்றலை வழங்கிடும், அன்பான இறைவா
தத் எனும் இறைவா
.
ஆழ்ந்த மூச்சுடன் லம் சேர்த்து மூலாதாரம் நோக்கிச் செலுத்தவும்
.
லம் லம் லம் லம் லம் லம் லம்
ஆழ்ந்த மூச்சுடன் வம் சேர்த்து °வாதிட்டானம் நோக்கிச் செலுத்தவும்.
வம் வம் வம் வம் வம் வம் வம்
ஆழ்ந்த மூச்சுடன் ரம் சேர்த்து மணிபூரகம் நோக்கிச் செலுத்தவும்.
ரம் ரம் ரம் ரம் ரம் ரம் ரம்

இரண்டாம் நிலை
            கைகளைத் தலைக்கு மேலே கொண்டு சென்று, ஒன்றாகச் சேர்த்தபின் தியான முத்திரையில் வைக்கவும்.
உன்னை வணங்கிடவே -இறைவா
உடலினைக் கொடுத்தாயே,
உன்னை நினைப்பதற்கே - இறைவா
உயிரினைக் கொடுத்தாயே,
உன்னை உணர்வதற்கே - இறைவா
உயர் ஞானம் தந்தாயே,
உன்னை அறிவதற்கே - இறைவா
உணர்வினில் ஒளியினை - இணைத்தாயே
ஞான ஒளி நீயே; அருள் ஞான ஒளி நீயே
ஞான ஒளி நீயே; அருள் ஞான ஒளி நீயே
ஞான மலர் நீயே; அருள் ஞான மலர் நீயே;
                                                                அருள் ஞான மலர் நீயே!

எண்ணங்களை ஹ்ரித் சக்கரம் நோக்கிச் செலுத்தவும்.
அஉம் அஉம் அஉம் அஉம் அஉம் அஉம் அஉம்
ஆழ்ந்த மூச்சுடன் யம் சேர்த்து அனாகதம் நோக்கிச் செலுத்தவும்.
யம் யம் யம் யம் யம் யம் யம்

மூன்றாம் நிலை

  ஆழ்ந்த மூச்சினை மெதுவாக இருதயச் சக்கரம் நோக்கிச் செலுத்தவும்.

        கைகளைத்தலைக்கு மேலே கொண்டுசென்று, ஒன்றாகச் சேர்த்தபின் கைகளை ஞான முத்திரையில் வைக்கவும்.
பக்திப் பரவசம் கொள்கையிலே - என் நெஞ்சில்
பசுமை எண்ணங்கள் பற்றிப் படருதய்யா,
ஞானமலரை நான் நினைக்கையிலே - வெண்
நிலவினொளி என்னுள்ளே ஆறாய் ஓடுதய்யா,
ஞான மலரை நான் பெற்றதுமே - என் முகம்
நாணத்தால் புன்னகை பூத்ததய்யா,
அன்போடு கூடிய பிரார்த்தனையில் - மனத்தில்
அமைதி நிலைத்ததய்யா உள்ளத்தில் அன்பு பெருகுதய்யா
அன்பும் அமைதியும் சேர்ந்ததனால் - நல்லெண்ணங்கள் அருகினில்
அமர்ந்திட வந்ததய்யா.
ஆழ்ந்த மூச்சுடன் ஹம் சேர்த்து விசுக்தி நோக்கிச் செலுத்தவும்
ஹம் ஹம் ஹம் ஹம் ஹம் ஹம் ஹம்
எண்ணங்களை ஆக்ஞா நோக்கிச் செலுத்தவும்
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
அதீதம் எனும் பரம்பொருளே
உன்னை உணர்ந்ததனால்
உயிர்க்குலம் தழைத்ததய்யா
உட்புறப் பூசல் எல்லாம் நீங்கி
உயர் ஞானம் ஓங்கி வளர்ந்ததய்யா
உண்மை வடிவினிலே உன்னை
உணர்ந்திடச் செய்தாயேயய்யா - என்னை
உயர்ந்திடச் செய்தாயேயய்யா
உள்ளத்தில் நானெனும் அகந்தையெல்லாம்
உருமாறச் செய்தாயேயய்யா - என்னை
உளம் மகிழ வைத்தாயேயய்யா
எண்ணங்களைச் சக°காரம் நோக்கிச் செலுத்தவும்.
அதீதம் அதீதம் அதீதம் அதீதம் அதீதம் அதீதம் அதீதம்

நான்காம் நிலை

     கைகளைத் தலைக்கு மேலே கொண்டு சென்று, ஒன்றாகச் சேர்த்தபின் கைகளை அதீத உத்திர போதி முத்திரையில் அல்லது சின் முத்திரையில் வைக்கவும்.

எண்ணங்களை உச்சிக் குழிக்குக் கீழே உள்நாவுக்கு மேலே செலுத்தவும்.
அதீதம் அதீதம் யம்; தத் அதீதம் அதீதம் அதீதம் அதீதம் அதீதம் அதீதம் யம்
தத் அதீதம் அதீதம் யம்,
அதீதம் அதீதம் யம்; தத் அதீதம் அதீதம் அதீதம் அதீதம் அதீதம் அதீதம் யம்
அதீதம் அதீதம் யம்; தத் அதீதம் அதீதம் அதீதம் அதீதம் அதீதம் அதீதம் யம்
தத் அதீதம் அதீதம் யம்,
தத் அதீதம் அதீதம் யம்,
யம் யம் யம் அதீதம்; தத் அதீதம் அதீதம் அதீதம் அதீதம் அதீதம் அதீதம் யம்
யம் யம் யம் அதீதம்; தத் அதீதம் அதீதம் அதீதம் அதீதம் அதீதம் அதீதம் யம்
யம் யம் யம் அதீதம்; தத் அதீதம் அதீதம் அதீதம் அதீதம் அதீதம் அதீதம் யம்
தத் அதீதம் அதீதம் யம்,
தத் அதீதம் அதீதம் யம்,
அதீதம் அதீதம் ஓம்; தத் அதீதம் அதீதம் அதீதம் அதீதம் அதீதம் அதீதம் யம்
தத் அதீதம் அதீதம் ஓம்,
அதீதம் அதீதம் ஓம்; தத் அதீதம் அதீதம் அதீதம் அதீதம் அதீதம் அதீதம் யம்
அதீதம் அதீதம் ஓம்; தத் அதீதம் அதீதம் அதீதம் அதீதம் அதீதம் அதீதம் யம்
தத் அதீதம் அதீதம் ஓம்,
தத் அதீதம் அதீதம் ஓம்,
ஓம் ஓம் ஓம் அதீதம்; தத் அதீதம் அதீதம் அதீதம் அதீதம் அதீதம் அதீதம் ஓம்
ஓம் ஓம் ஓம் அதீதம்; தத் அதீதம் அதீதம் அதீதம் அதீதம் அதீதம் அதீதம் ஓம்
ஓம் ஓம் ஓம் அதீதம்; தத் அதீதம் அதீதம் அதீதம் அதீதம் அதீதம் அதீதம் ஓம்
தத் அதீதம் அதீதம் ஓம்,
தத் அதீதம் அதீதம் ஓம்,
தத் அதீதம் அதீதம் ஓம்,
சுண்டு விரல்களால் துரியத்தினைத் தடவி விடவும்.

ஐந்தாம் நிலை

கைகளை மேலே கொண்டு சென்றபின், கைகளைச் சின் முத்திரையில் வைக்கவும்
எண்ணங்களை துரியாதீதம் நோக்கி செலுத்தவும்.

அதீதம் அதீதம் அதீதம் அதீதம் அதீதம் அதீதம் அதீதம்
ஊனுருக உயிருருக உள்ளத்தின் மையத்திரல்
ஆன்மீகச் சுடர்விளக்கை அணையாமல் ஏற்றிவைப்பீர்,
ஞானப் பெருமழையில் நாங்கள் நனைந்தவண்ணம்
வான்முகட்டை எட்டுகின்ற வகைசெய்து அருள்வீரே.
ஆனந்தக் கடலினிலே ஆடிக் களித்திடவே
ஆன்மீகச் சேவையினை அன்புடனே செய்திட அருள்வீரே
நல்லெண்ணத்தின் வெளிப்பாடாய் நல்மனத்துடன் செய்கின்ற
எல்லோரின் பிரார்த்தனையை ஏற்றருள்வீர் பரம்பொருளே.
முன்செய்த வினைப்பயன்கள் முற்றிலும் குறைந்திட
என்றென்றும் நிறைவுடன் செயல்படுவோம் பரம்பொருளே.
என்றென்றும் மனநிறைவுடன் செயல்படுவோம் பரம்பொருளே.
ஆனந்தம் ஆனந்தம் ஆன்மீகமளித்திடும் ஆனந்தம்
ஆனந்தம் ஆனந்தம் அருளாளரடைகின்ற ஆனந்தம்
தெள்ளத் தெளிந்தவர்கெல்லாம் தேடிக்கிடைத்திட்ட ஆனந்தம்
உள்ளொளி பெருக்கி உயர்ந்தோர்க்கெல்லாம் உவகைகூட்டிடும் உள்ளானந்தம்
உள்ளானந்தம் உள்ளானந்தம் உள்ளானந்தம்
எண்ணங்களைத் துரியம் நோக்கிச் செலுத்தவும்,
ஓம் சாந்தி
எண்ணங்களை ஹ்ரித் சக்கரம் நோக்கிச் செலுத்தவும்,
ஓம் சாந்தி
எண்ணங்களை மூலாதாரம் நோக்கிச் செலுத்தவும்,
ஓம் சாந்தி

No comments:

Post a Comment