Friday, August 26, 2011

15. ஆத்ம பிரார்த்தனையின் நுணுக்கங்கள்


15. ஆத்ம பிரார்த்தனையின் நுணுக்கங்கள்

      இயற்கையைப் பற்றி நுணுக்கமான கருத்துக்கள் தொடக்கத்தில் புரியாததுபோல் இருந்தாலும் ஆத்மப் பிரார்த்தனையை பழகப் பழக தனக்குத்தானே தெளிந்து நிற்கும்.
      இயல்புணர்வை நினைவுபடுத்தி உள்ளானந்தமாக வாழும் வாழ்க்கையே சிறந்தது. ஆனால் இயற்கையின் ஆற்றலை பற்றி புத்தகங்களைப் படித்து நேரத்தை வீணாக்குகின்றோம். இவற்றைப் பற்றி பேசிச்கொண்டு வாழ்நாளை வீணாக்குகின்றோம். அதைப் பற்றி நேர்வழி அறியாமல் சுற்று வழியில் சுழன்று கொண்டே இருக்கின்றோம். ஒவ்வோர் இயல்புணர்வும் தெய்வீகமானது. ஆனால் அது அறியாமை என்ற மேகங்களால் மூடப்பட்டுள்ளது. அதனால்தான் மனிதர்களுக்குள் இத்தனை வேறுபாடு.
      இயல்புணர்வை ஆற்றலை அறியும் முறைகளில் ஒன்று ஆத்ம பிரார்த்தனை ஆகும். இது அவர் வினைக்கு ஏற்பக் கருத்துக்களை மேன்மேலும் விளக்கிக் காட்டுவதாகும். இது மனத்தைத் தட்டி அதிலிருந்து அவனுக்கு வேண்டிய நுண்ணறிவை அறிந்து கொண்டு அவர்களை ஒழுக்கச் சாதகத்திற்கு கொண்டு வரும்.
        ஆத்ம பிரார்த்தனை என்பது இயற்கை ஆற்றலைத் தினமும் நினைவுபடுத்தும் பிரார்த்தனைப் பயிற்சியாகும். இந்த இயற்கை இயல்புணர்வால் புறப் பொருள்களின் மீது உள்ள எண்ணம் மெய்ப்பொருளைப் பற்றுவதால் புலன் வழிச் செயல்கள் ஒழுங்கு படுகின்றன. இக யுத்திகள் அழிகின்றன. ஆத்ம பிரார்த்தனையை இயல்புணர்வின் மூலம் பயிலும்  போது அது அநேக இரகசியங்களை (நுணுக்கங்கள்) ஆராய்ந்து தெளிவடையச் செய்கிறது.
           1. கர்மா என்ற அதி அற்புத வினையில் வெற்றி காண்பது சிரமமாகும். தூய்மையாகச் செயல்பட்டு அதனை அனுபவிக்க வேண்டும். இதில் மிகத் தெளிவாக இருக்க வேண்டும். “நான் யார்?” இந்த தெளிவு கடைசி மூச்சு உள்ளவரை இருக்க வேண்டும்.  பூரணத் தெளிவோடு இருக்கும்போது பேருண்மை உனக்குத் தெளிவாக விளங்கும்.
         2. இயற்கை சக்தியை நமது உடலில் உள்ள முக்கியமான நாடிகளுக்கு இட்டுச் சென்று தூங்கிக் கொண்டிருக்கும்  இயல்புணர்வை விழிப்படையச் செய்கின்றது. இவை சூக்குமச் சரீரத்தை (நுண் உடலை) அறியச் செய்து முதிர்ந்த நிலையில் அதிசூக்கும வெளிக்குச் செல்லும் ஆற்றல் பெற்றுச் சென்று வருவது இயல்பாகிவிடும். இறுதி மரணவேளை நெருங்கும்போது இந்த ஜீவன் அதிசூக்கும வெளிக்குச் சென்று பிரம்மமந்திரம் வழியே வெளியே செல்லும். இதுவே உயர்ந்த நிலை; பிறப்பின் பெரும் பயனாகும்.
        3. ஆத்ம பிரார்த்தனை உடலில் உள்ள முக்கிய இயல்புணர்வு மையங்களை (சக்கரங்களை) அதன் இயற்கை நுண் அதிர்வுகளை பலப்படுத்தி, தூய்மையுறச் செய்கிறது. இதனால் மனமும் உடலும் சமவிழிப்பு அடைந்து நுண்ணுர்வு விழிப்பு நிலையில், பெரு விழிப்பால் மேலோங்கி உயிர் ஆற்றலை (குண்டலினி) விழிக்கச் செய்கின்றது.
        4. இயற்கை அச்சின் பேரியக்க ஒருங்கிணைப்பு ஆற்றல் ஹ்ரித் சக்கரத்தில் நுண்ணுணர்வு தன்மாற்றம் ஏற்படுத்திப் பெரு விழிப்பை ஏற்படுத்துகிறது. இந்தத் தன்மாற்றம் மின்காந்தப் பெருநிலையில் சூக்கும சரீரத்தில் உள்ள (நுண் உடலை) இயல்புணர்வை விழிப்படையச் செய்கின்றது. இந்த ஆற்றல் அனாகதச் சக்கரத்தை ஊக்குவித்து, உந்துவதால் உயிர்ச்சக்தி (குண்டலினி சக்தி) மேல் நோக்கிச் செல்லும் ஆற்றலை அதிகரிக்கச் செய்கிறது. இந்தச் சக்தி கபால வெட்ட வெளியை அடைந்ததும் அக அதீதம் சூக்கும சக்தியாகத் தன்மாற்றம் அடைகிறது.
           5. மனமே நமது உச்சிக்குழிக்கு கீழே உள்நாவுக்கு மேலே உள்ள இடத்தில் நினைவை நிறுத்தி நுண் அதிர்வால் இயற்கை மெய்ப் பொருளை ஆராதனை செய்வதால் மெய்யுணர்வோடு இயல்புணர்வு ஈர்க்கப்பட்டு முச்சுடர் விரிந்து ஒலியே ஒளியாகின்றது. ஆத்மா, அக, புற அதீதத்தின் சூக்கும ஜீவ பயணத்தை உற்று உணர்வதால் மேன்மையானது.
          6. பிரபஞ்ச வெளியில் பரந்து நீண்ட மகா குண்டலினி சக்தி, சிவ பிரபஞ்ச வெளியில் மெய்ஞ்ஞானப் பேரூணர்வில், புற அதீதம் சூக்கும சக்தியாகத் தன்மாற்றம் அடைகிறது. இதுவே எல்லா மூலங்களுக்கும் ஆதாரமாக இருக்கிறது.
           7. நம் ஜீவனை ஆத்மாவாகக் கொண்டு வந்து பேரானந்தப் பெரு வெளியில் அக அதீதம் சூக்கும சக்தியும் புற அதீதம் சூக்கும சக்தியும் எங்கும் நிறைந்துள்ள சிவவெளியில் ஐக்கியமடையச் செய்வதுதான் அதீதம். அந்த அதீதப் பேரொளி உனக்கு ஆனந்தத்தைக் கொடுக்கும். அங்கிருந்து பிரம்ம மந்திரத்தில் கபாலத்தை அடைந்து உள்ளானந்தப் பேரொளியை இதயக் கமலத்தில் வீற்றிருக்கும், இந்த அதீதம் உள்ளானந்தப் பேரொளியைக் கண்டு, அதனைப் பெற்ற பெரும் பேறாகக் கண்டு இருத்தல் வேண்டும்.
          8. அறிவை இயல்புணர்வில் நிலைநிறுத்திக் கடமைகளைச் சிறப்பாக செயலாற்றி, மாறுபட்டஉலகச் சூழலில் நிலையான மனோநிலையோடிருங்கள். முடிந்த அளவு சேவையில் ஈடுபடுங்கள். உங்கள் மனம் பிரபஞ்ச உணர்வோடு நிலைத் திருக்கட்டும். உங்கள் புத்தி சரியாக பகுத்தறியட்டும். உங்கள் ஆத்மா இயல்புணர்வின் தொகுப்பால் மெய்ப்பொருளுடன் இணைந்திருக்கட்டும்.
ஆத்ம பிரார்த்தனையால் இயல்புணர்வை நினைவுபடுத்தும் பயிற்சி அல்லது பிரார்த்தனை அன்றி வேறில்லை. ஆத்ம பிரார்த்தனையின் உண்மையைச் சந்தேகத்திற்கு இடமின்றித் தெளிவாகப் புரிந்துகொண்டு அது சுட்டிக்காட்டும் உண்மைப் பொருளைத் தன் இயல்பு நிலையாக உணர்ந்து கொண்டு செயல்பட வேண்டும்.
ஆத்ம பிரார்த்தனையில் இயல்புணர்வின் சக்தி தொகுப்பு சித்தி சுத்தி ஏற்படும். இதனால் எதிர்ப்பு சக்தி தேகத்தில் பரவும். அருள்சக்தி வளரும். சிற்றறிவு பேரறிவாக மாறும். எண்ணிலடங்கா பயன்கள் இயல்புணர்வின் சக்தி தொகுப்பில் கிடைப்பதால் வரும் இந்த உண்மைகளை அவரவர்கள் பிரார்த்தனை செய்து உணர்ந்து கொள்ளலாம்.
வெளியில் அறிய முடியாமல் இருந்த உங்களது ஆத்மா ஆத்மபிரார்த்தனையில் உங்களிலேயே வைத்து முழுமையானவ ராக இருங்கள்.


14. தளர்வு நிலையில் இயல்புணர்வு


14. தளர்வு நிலையில் இயல்புணர்வு

    தளர்வு நிலை என்பது ஓய்வெடுத்துக் கொள்ளுதல் என்று பொருள். ஒரு மனிதன் தனது சுயநினைவுடன் தனது மனத்தையும் உடலையும் அமைதியுறச் செய்து கொள்ளுதலையே தளர்ச்சி பெறுதல் என்று கூறுகிறோம். உடல் இறுக்கத்தை தளர்த்தும் பல யோக முறைகளும், மனதை இசையால் தளர்த்தும் பாரம்பரிய முறைகளும் இருக்கின்றன. இயற்கை நாத ஆனந்தம் - இறைவனின் ஒலி, இந்த இயற்கை ஒலியே இறைவன். பிரபஞ்ச ஒலி என்பது ஒரு உயிரோட்டம் உள்ள ஒலி. இது தருகின்ற நிவாரணம் சிறந்த தளர்வு முறைகளில் ஒன்று.
   இயற்கை ஒலியால் தளர்வு நிலை செய்யும் பயிற்சி ஒரு சிறந்த புதிய கலையாகும். இந்த பயிற்சி ஆக்கப்பூர்வமான ஆற்றலை உருவாக்கி ஆழ்ந்த தளர்வு நிலைக்கு வழிவகை செய்கிறது. இதனால் உள்மன ஆற்றலை அறிந்து விழிப்படையச் செய்கிறது. இந்த பயிற்சியில் இயற்கை நாதஒலி வலிமைமிக்க உடற்பகுதிகளிலும் உள்மனதிலும் ஒலி மற்றும் அதிர்வலை ஆகியவற்றிக்கிடையே ஒன்றுக்கொன்று இணைந்து செயல்படுவதால் உள்ளே சீரான ஒலியலைகள் உற்பத்தியாகின்றன. இந்த ஒலியலைகள் இயல்புணர்வை இயக்கி, உருமாறி சக்தியை அதிகரிக்கச் செய்கிறது.
     இயற்கை ஒலி, உள்மன ஒலியாக மாறி இனிய மனநிலையை உருவாக்குகிறது. இயற்கை தளர்வு நிலையில் தத் என்ற ஒலி அதிர்வின் மூலம் பிரபஞ்சத்தில் நீக்கமற நிறைந்துள்ள பரம்பொருளை நினைவுபடுத்துகிறது. உடலில் மூலாதார ஆற்றல் மையம் என்பது உடலின் ஒலியின் துவக்கப் பகுதியை ஒலியின் அதிர்வால் விழிக்கச் செய்து வலுப்படுத்தப்படுகிறது.
      மேலும் இயற்கையான நுட்பமான முறையில் ஒலியின் அதிர்வால் உள்ளுணர்வு மையங்களையும் ஒவ்வொரு ஒலி அதிர்வுகளால் விழிக்கச் செய்து வலுப்படுத்தப்படுகிறது. இந்த முறையில் கற்பகமாக உள்ள தெய்வீக ஆற்றலை நுட்பமான முறையில் இயற்கை ஒலி அதிர்வால் பின்னிப்பிணைக்கச் செய்வதால், உடலில் உள்ளே உள்ள உள்ளுணர்வு மையங்களை நிதானத்தில் நிலைக்கச் செய்கிறது. இதை இயற்கையான குணமளிக்கும் ஒலியாலும், பழமையான நுட்பமான ஒலி அதிர்வுகளால் ஆற்றல் அதிகரிக்கப்பட்டு தூண்டப்படுகிறது. இது மேலும் ஊக்கப்படுத்தப் பட்டு உடலும் மனமும் ஒன்றிணைந்து மகிழ்ச்சியான உணர்வுடன் அமைதியுறச் செய்து உள்முக பயணத்திற்கு ஆட்படுத்துகிறது. இந்த நிலையில் தலையின் உச்சியில் தெய்வீக ஒலியை ஈர்க்க முயலுகின்றது. இந்த தெய்வீக ஒலியலைகளால் ஆராதனை செய்யப்படுவதால் தலையின் உச்சியில் பொன்முட்டை வடிவில் இருக்கும் பிந்துவின் மையத்தில் இந்த ஒலி அதிர்வுகள் நிலை நிறுத்தப்படுகின்றன. இந்த நிலையில் மனம் லயித்து வலுப்படுத்தப்படுகிறது. இதனால் இயல்புணர்வும், இயற்கை ஒலி அதிர்வுகளும் இரண்டறக் கலந்து ஆத்மாவை விழிப்புக்கு மெய்யுணர்வு அறியச் செய்கிறது.
     இந்த இயற்கை நாத இசையின் மெய் ஒலிகளை மூளையின் மூலம் கேட்டு இன்புறுவதற்கு முயலாதீர்கள். மாறாக அமைதியான இடத்தில் வசதியான முறையில் இந்த ஒலிகளை உங்கள் இதயவெளியில் உல்லாசமாக பறந்து செல்லட்டும்.
       இதனால் உடலில் உள்ளே ஒவ்வொரு இடத்திற்கும் புத்துணர்வை தோற்றுவிக்கிறது. இதனால் உள்ளத்தில் ஆழமாகப் பற்றியுள்ள இறுக்கமான மனநிலை தளர்வுறுகின்றது. முரண்பாடுகள் களையப்படுகின்றன. உள்ளுணர்வின் விழிப்பு விரைந்து செயல் படுகின்றது. இயற்கை பெருங்கருணை எனும் அமுத எழுத்து ஒலிகள் உங்கள் உள்ளமெங்கும் பெருகி ஓட பழகுங்கள். இயற்கை இன்னிசையின் ஒலியலைகள் உங்கள் உள்ளமெங்கும் பெருகி ஓட பழகுங்கள். பிரபஞ்ச நாத இன்னிசையின் ஒலியலைகள் உங்கள் இதயகமலத்தில் ஒலிக்க செய்வதன் மூலம் நீங்கள் இயல்புணர்வு சக்தியால் புதுப்பிக்கப்பட்டு நல்வழிப்பாதையில் செல்ல உதவுகின்றது.
     இந்த இயற்கை நாத ஒலி அதிர்வுகள் இயல்புணர்வை ஆழமாக மனதில் சென்று மூளையில் மறைந்து கொண்டிருக்கும் நேர்முக இயல்புகளை ஊக்குவிப்பதால் நேர்முக ஆற்றல் அதிகரித்து நம்மிடம் உள்ள தேவையற்ற அச்சம், பயம், குழப்பங்கள் குறைகின்றன. இதனால் நிறைவான உறக்கம், குணப்படுத்துவதற்கு கூடுதலான எதிர்ப்பு சக்தியை கிடைக்கச் செய்து உடலின் சீரான இயக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் ஏற்படும் இயல்புணர்வால் புற மற்றும் அக இயல்பை அறிய செய்து உடலும், மனமும் சமநிலை அடைந்து, முழுமையான தளர்வு நிலை அக தெய்வத்தை விழிப்புறச் செய்கிறது. இந்த இயற்கை நாத ஒலிகளை தினமும் காலை, மாலை 6.30 மணிக்கு தொடங்கி 6.51 வரை கேட்டு இன்புறுதல் மூலம் உடலும் மனமும் ஒன்றிணைந்து சூழ்ந்த தளர்வுறுதல் மூலம் நம்மிடமுள்ள சக்திகள் புதுப்பிக்கப்பட்டு ஆற்றல் கிடைக்கிறது. இதனால் நிறைவாக செயல்பட்டு வாழ்க்கையை முழுமையடையச் செய்கிறது.
      இந்த முடிவில்லா இயற்கை நாத ஓசையில் இணைந்து உள்ளானந்தம் அடைவோம். இந்த குறுந்தகடு ...யின் வெளியீடாகும். இதன் விலை ரூ.199/- ஆகும்.




13. இயல்பு-அருள் பயிற்சி



13. இயல்பு-அருள் பயிற்சி

       இன்று நமது ஒழுக்க நெறியிலும், மதங்களிலும் இருக்கும் சீர்குலைவிற்கு முக்கியமாக நமது சூழ்நிலையும், நமது தவறான பயிற்சியுமே காரணம். மன ஆரோக்கியத்துக்கு செய்யும் பயிற்சிகள் மிக குறைந்து விட்டன. ஒரு மனிதன் நல்ல ஊதியம் பெற்று சுகமாக வாழ்க்கை நடத்துவதற்குத் தேவையான உலக பந்தமான பயிற்சியை கற்க முக்கியத்துவம் கொடுக்கின்றோம். தன்னை உணர்வதற்குத் தேவையான பயிற்சிகள் புறக்கணிக்கப்படுகின்றன. இன்று வழிபாடு செய்வதற்கு மட்டுமே மக்களுக்கு கற்றுக் கொடுக்கப்படுகிறது. அதன் உட்பொருளை அறியாமல் தங்கள் ஆயுள் முழுவதும் அநேகமாக ஒரு பயனுமின்றி இத்தகைய வழிபாடுகளைச் செய்து வருகின்றோம். இதனால் தன்னியல்பை அறியாமல் ஆசைகள், கவர்ச்சித் தூண்டுதல்கள், உணர்ச்சிவசப்பட்ட கோபதாபங்கள் ஆகியவை முன்போலவே இருக்கின்றன. இந்த பயிற்சிகளின் முக்கிய நோக்கம் தன்னியல்பை அறிவதேயாகும். இயல்பு பயிற்சியில் மனிதனை சரியாகப் பக்குவமாக்கும் இயற்கைச் சக்தி இருக்கிறது. சரியாக பக்குவமாக்குவது என்னவென்றால் தன்னியல்பை அறிந்து அதன் விளைவாக அவனுடைய இயந்திரங்கள், புலன்கள், செயல்திறன்கள் இவை மிகமாகப் பயன்படுத்தப்படுகின்ற. இதை தகுதி பெற்ற ஆசிரியர்களின் வழித்துணையுடன் சரியான முறையில் பயிற்சி செய்வது மிக முக்கிமான அம்சம். இந்த வகைப் பயிற்சியில் உள்ளத்தில் சாந்தமும், மன அமைதியும், எளிமையும், மென்மையும் ஏற்படும்.
       மேற்கூறிய பயன்களைக் கொடுக்கவில்லை எனில் அந்தப் பயிற்சிகள் சரியான பயிற்சி அல்ல, சில ஆசிரியர்கள் பயிற்சி கொடுக்கும் போது தங்களுடைய மனசங்கல்ப சக்தினால் மற்றவர் மனதில் சாதாரணமான செயல்பாட்டையும் நிறுத்தி அதன் விளைவாக தற்காலிகமாக உணர்ச்சியற்ற நிலையை உருவாக்குகிறார்கள். ஆரம்ப நிலையில் இருப்பவருக்கு இந்த மனோ நிலை மிகவும் கவர்ச்சிகரமாக இருக்கும். இந்தப் பயிற்சிகள் சுய விளம்பரமும் தற்பெருமை நோக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டுதான் தாம் அடைந்துள்ள சக்தியை தவறான முறையில் பயன்படுத்துகின்றனர். இம்மாதிரி அடக்கி வைக்கப்பட்ட அல்லது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட எண்ணங்கள் மிக விரைவில் அதிக பலத்துடன் எதிர் தாக்குதல் தாக்கி அவருடைய உடல், மனத்தை தாக்குகின்றன. இதனால் மனக் குழப்பம், தலைவலி, எரிச்சல், கோபம் போன்ற உபாதைகள் ஏற்படுகின்றன.
       இயல்பு-அருள் பயிற்சியில் மனித இலக்கை அடைய வேண்டும் என்ற திடசித்தம், சரியான வழிமுறை, சரியான வழிக்காட்டி கொண்டுள்ளன. இவைகள்தான் பூரண வெற்றியடைவதற்கு தேவையான அம்சங்கள். இயல்பு-அருள் பயிற்சியானது அகத் தூய்மைப்படுத்துவதிலிருந்தும், யோக சக்கரங்களை சுத்தம் செய்வதிலிருந்து ஆரம்பமாகிறது. அதாவது உள்சுத்திகரிப்புடன் ஆரம்பமாகிறது. இதில் இயல்பான ஆற்றல் பரிவர்த்தனை முறையில் பயிற்சி அளிப்பதால் நமது இயல்பு சக்தியை அறிந்து கொள்ள செய்து, அதற்கு மேல் செல்ல நாமாகிய ``நான்’’ எனும் தன்னை அறிய செய்கின்றார். இந்தப் பயிற்சிகள் நான்கு நிலைகளாக உள்ளது.
      முதல் நிலைப் பயிற்சி : இதன் பயிற்சி காலம் மூன்று மாதங்களாகும். இதில் அன்றாட கடமைகளுடன் காலை, மாலை ஒருங்கிணைந்த எளிய உடற்பயிற்சியும், ஆத்ம பிரார்த்தனையும் செய்து இயல்பான சேவையில் விளக்கம் பெற வேண்டும். இதில் மூலாதாரச் சக்கரத்தில் ஆசிரியர் யோக சக்தியை செலுத்தி அதன் மூலம் அவருடைய உள்சிக்கல்களை நீக்கி யோக சக்கரங்களை சுத்தப்படுத்தி அவற்றைப் பலப்படுத்துவார்.
     இரண்டாம் நிலைப் பயிற்சி : இதன் பயிற்சி காலம் மூன்னூறு நாட்கள் ஆகும். இதில் அன்றாட செயல்களுடன் தினமும் காலை, மாலை ஒருங்கிணைந்த எளிய உடற்பயிற்சி, ஆத்ம பிரார்த்தனை செய்து தனக்குள்ளே விளக்கம் பெற வேண்டும். இயல்பான சேவையில் உள்முக ஆற்றலை வளர செய்ய வேண்டும். ஹரித் சக்கரம் குருவின் அருளால் இயக்கப்பட்டு சக்தி அனாகத சக்கரத்தை அடைகிறது. இது தூண்டப்பட்டும், ஊந்தப்படும் சக்தி சிறிது காலம் இதயத்தில் இருந்து பிறகு மற்ற சக்கரத்துக்கு பரவுகிறது. இதனால் ஆன்மீக முன்னேற்றத்தை எளிதாகவும், செம்மையானதாகவும் ஆக்குவதே இதன் சிறப்பு அம்சம்.
     மூன்றாம் நிலைப் பயிற்சி : இதன் பயிற்சி காலம் மூன்று வருடங்களாகும். தினமும் காலை, மாலையில் ஒருங்கிணைந்த எளிய உடற்பயிற்சியும், இயல்பு நிலை தியானம் செய்தல் வேண்டும். இயல்பான சேவையில் கர்மத்தை அகற்றி தன்னை அறிய செய்வதாகும். இதில் ஆச்ஞா சக்கரத்தில் இயல்பு அருள் தீட்சை அளிக்கப்படுகிறது. இதனால் மெய்யுணர்வதற்கான தாகம் நம்முள் வளர்ந்து வலிமை பெறத் தொடங்குகிறது. தன்னியல்புடன் ஆழமாக வேரூன்றுயதுமான பயனை உருவாக்குகின்றது.
    நான்காம் நிலைப் பயிற்சி : இது ஆசிரியர் பயிற்சியில் பல நுணுக்கங்களும் இரகசியங்களும் கற்றுத் தருபவை இதைப் புத்தகத்தின் வழியாகத் கற்க வியலாது.
                இந்தப் பயிற்சியின் மூலம் இயற்கையின் இயல்புடன் நிரந்தரமானது, ஆழமாக வேரூன்றியதுமான பயனை உருவாக்கி, நம் இயல்பு மெய்யுணர்வாக திரும்பியுவுடன் எல்லாச் செயல்களும், வேலைகளும் மகோன்னதமான பரம சக்தியுடன் நமக்கு தொடர்பு இருப்பதை நாம் இயற்கையாகவே உணர ஆரம்பிக்கிறோம். இந்த இயல்பு அருள் சக்தி காட்டாற்று வெள்ளமாய் பொங்கிப் பெருகி சுற்றியுள்ள அனைத்தையும் உயர்வானதாக, நல்லதாக குணப்படுத்தும் சக்தியுடையதாக மாற்றுகின்றது.