Friday, August 26, 2011

11. உள்ளானந்தம்





11. உள்ளானந்தம்

      நம் உடலில் இருக்கும் தூய இயல்புணர்வைப் பெருக்கி, பிரபஞ்ச ஆற்றல் மெய் உணர்வோடு நம் வாழ்வை இணைத்துக் கொள்வதுதான் அதீதம் ஆகும். இது ஆத்மாவின் இயல்பு. இறைவனின் சொரூப உண்மை, சிருஷ்டியின் இரகசியம். ‘நம்மைகடந்து நமக்குள் மறைந்திருக்கும் இயல்பை இயல்புணர்வால் ஒவ்வோர் ஆன்மீக சாதகரும், அடைய வேண்டிய இலக்கைச் சுட்டிக்காட்டுகின்றது.
    அதீதம் என்பதே பிரபஞ்ச வெளியில் உள்ள ஆனந்தத்தை- மகா நிர்வாண நிலையில் உள்ளானந்தத்தைக் கொடுப்பதே யாகும். நம் ஜீவனை ஆத்மாவாகக் கொண்டு வந்து பேரானந்தப் பெரு வெளியில் அக அதீதம் சூக்கும சக்தியும், புற அதீதம் சூக்கும சக்தியும் எங்கும் நிறைந்துள்ள சிவவெளியில் ஐக்கிய மடையச் செய்வதுதான் அதீதம். இந்த அதீதப் பேரொளி உனக்கு ஆனந்தத்தைக் கொடுக்கும். அங்கிருந்து பிரம்ம மந்திரத்தின் மூலம் கபாலத்தை அடைந்து உள்ளானந்தப் பெரு ஒளியாக உடலின் மையப் பகுதியான வயிற்றை அடையவும். இந்த அதீதம் உள்ளானந்தப் பேரொளியைக் கண்டு, அதனைப் பெற்ற பெரும் பேறாகக் கொண்டு இருத்தல் வேண்டும்.
      அதீதம் என்பதை முழுமையான வாழ்க்கை முறை என்று கூறலாம். இது முழுமையான பரிபூரண உள்ளுணர்வு, அன்பு, பேரானந்தம் மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றின் மொத்த உருவம். இதனைப் பேரொளி என்று கூறலாம். இந்த உலகத்தில் முழுமையான பேரின்ப நிலையை ஒவ்வொருவரும் அடைவதற்குச் சாத்தியக் கூறான ஒளிமயமான இறை உணர்வு, இது அனைத்துலகத்தின் அன்பளிப்பு மற்றும் இரக்க உணர்வு. ஒவ்வொரு மனிதனும் சுய நலத்தின் பிடியிலிருந்து விலகிச் செல்வதற்கான வழிமுறையைக் காட்டுகிறது. இது எல்லாவற்றிலும் நிறைந்திருப்பது. அதாவது இறைவன் - வாழ்க்கையின் உயிர் எல்லாப் படைப்புகளிலும் நிறைந்துள்ளது. இந்த இயல்புணர்வே நம் ஆற்றலை உணர்ந்து கொள்ளப் பேருதவி புரிகிறது.
     இந்த அதீதம் பேரொளியின் உட்பொருளின் ஆற்றலால் தன்னை அறிந்து இன்புறுவர். இந்த அதீதப் பேரொளி பிரகாசம் மிக்கது. முப்பரிமாண பந்து போன்று தூய ஒளியால் ஆனஅதீதம், உள்ளானந்த பேரொளியாக அலைகளை ஏற்படுத்தி அனைத்தையும் ஆனந்தப்படுத்தும். இந்த அதீதம் உள்ளானந்தப் பேரொளியை ஆத்ம சாதனையினால் அறியலாம்; உணரலாம்; காணலாம்.
    இதனால் இயல்புணர்வின் சக்தி கிடைத்து இகபுத்திகள் படிப்படியாக அழிந்து புத்தியிலிருந்து விலக்கி விட்டு இதய வெளியில் உள்ளானந்தமாக மாறுகிறது. இந்த நிலை பெற்றவர்கள் என்றும் உள்ளானந்தமாய், உள்ளானந்தமே இவராய் இருக்கும் நிலை வரும். இவர்கள் உலக சுபீட்சத்திற்கு வினையாற்றுவர். அண்டவெளியில் நிறைவான வாழ்க்கை வாழ்ந்து முழுமை அடைவர். பந்த முக்தி அதீதம்.
ஆனந்தம் ஆனந்தம் ஆன்மீகமளித்திடும் ஆனந்தம்!
ஆனந்தம் ஆனந்தம் அருளாளடைகின்ற ஆனந்தம்!!
தெள்ளத் தெளிந்தவர்க்கெல்லாம் தேடிக்கிடைத்திட்ட ஆனந்தம்.
உள்ளொளி பெருக்கி உயர்ந்தோர்க்கெல்லாம் உவகையூட்டும் உள்ளானந்தம் (அதீதம்).
உள்ளானந்தம்! (அதீதம்), உள்ளானந்தம்!! (அதீதம்), உள்ளானந்தம்!!! (அதீதம்).

No comments:

Post a Comment